Thursday, December 30, 2010

வேண்டும் வேண்டும்!

வேண்டும் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
ஒரு குண்டூசியளவு உதவியைக் கூட 
ஓங்கி உயர்ந்த மலையளவு நினைத்திடல் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நாம் கேட்க்கும்  மலையளவு உதவி கூட 
ஒரு குண்டூசியாக மற்றவர்க்கு இருந்திடல் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
சாப்பிடும் சாப்பாடு சாதாரணம் என்றாலும் 
ருசித்து ரசிக்கும் அன்பான மனப்பக்குவம் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நம்மை வேதனைப் படுத்திய வார்த்தைகளை 
நாம் மீண்டும் உபயோகிக்காத நிலை வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
யாரையுமே ஏளனமாக பார்க்காத 
பார்வை வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
உண்மையுடன் கூடவே இருப்பவர்களுக்கு கூட தெரியாமல் 
நம் ஆசைகளை திருட்டுத்தனமாக தீர்த்துக்கொள்ளாத மனம் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . .
மற்றவர்களின் உபத்திரவங்களை மனதில்
நிறுத்தாத நிலை வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மிக  உயர்வுடன்
நினைக்கும் பக்குவம் நமக்கு வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . .
என்றும் நம்மை நல்லவர்களாகவே 
அறியப்படுதல் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நம்மைப்பற்றி ஒருவர் நினைத்திடும்போது அவர் மனதில் பூ பூக்க வேண்டும் ; மணம் வீச வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நாக்கிலிருந்து வரும் வார்த்தைகள் 
நஞ்சு கலக்காத தேனாக வர வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . .
நம் குடும்பத்தவர் நம்மை மிகச்சிறந்த 
நண்பனாக அறிதல் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
நம் நண்பர்கள் நம்மை அவர்களது 
குடும்பத்தவராக நினைத்திடல் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . . 
மன்னிக்கும் இதயம் வேண்டும்;
மன்னிப்பு கோருகிற இதயமும் வேண்டும்!

வேண்டும் வேண்டும் . . .
செம்மையுற்ற , நீதி தவறாத, செழுமையான, நிலையான   
வாழ்வு இன்று முதல் அமைந்திடல் வேண்டும்!

இனிய ஆங்கில புத்தாண்டு (2011) வாழ்த்துக்கள் 

No comments: